Monday, July 12, 2010

கவிதைத்தூறல்கள்

விளம்பரம் 


அவள் கூந்தலுக்கு விளம்பரம் தேவைப்பட்டது 
எனவே தான் பூக்கள் படைக்கப்பட்டன.


செயற்கை நிலா 


மஞ்சள் வானத்தில் ஒரு செயற்கை நிலா 
அவள் நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு


கால் முளைத்த கவிதை 


கவிதைக்கு கால் முளைத்து 
பர்த்திருக்கீர்களா? - இல்லையென்றால் 
அதோ அவ்வழியே தான் 
அவள் நடந்து செல்கிறாள் 
பார்த்து கொள்ளுங்கள்.


பௌர்ணமி 


அவளை பார்த்துவிட்டுத்தான் உறங்கச்செல்வேன் 
என அடம் பிடிக்கிறது நிலா!!
எனவே தான் நேற்று பௌர்ணமியோ!!!!


வெட்கமில்லாதவள்


நான் அவளை எங்கு தொட்டாலும் 
என்னை அவள் திட்டுவதே இல்லை,
இப்படிக்கு மழைத்துளி.


அழகின் அவஸ்தை 


அழகை பிறந்தாலே தொல்லைதனோ?
ஆயிரம் மீனுக்கிடையில் சிக்கிக்கொண்ட ஒரு  நிலா.


தடை உத்தரவு 


உன்னால் சாலை விபத்துகள் அதிகரிக்கிறதாம் 
அரசாங்கமே ,
நீ வெளிவரத் தடை விதித்துள்ளது.