காதல் குறள்:
வழிமொழிதல் யார்க்கும் எளியவாம் -அரியவாம்
காதலை முன்மொழியும் செயல்
சேலைக் கொலை:
சுரிதார் அணிந்து வந்து
கொன்றது போதாதென-இப்போது
சேலை அணிந்து கொள்ள வருகிறாய்....
சொல்லிவிடு
இப்படி என்னை வித விதமாய் கொல்வதற்கு-இன்னும்
எத்தனை யுக்திகள் வைத்திருக்கிறாய் .....
பெரும் குழப்பம்:
அருகில் நீ...
எதிரில் நிலா....
இருவரில் யாரை ரசிப்பது ?
குழப்பத்தில் நான்....
அக்னி வெயில்:
நீ...
குடை பிடித்துச் செல்வதால்
கோபத்தில் மற்றவர்களை
கொளுத்துகிறது....சூரியன்...
ஒப்பனை:
ஒப்பனை செய்து செய்து என்ன பயன் ?
உன்னால்...
அழகு சாதனங்கள்
அழகானது தான் மிச்சம்-அவற்றால்
உன்னை உன்னைவிட
அழகாக மாற்ற முடியவில்லை
புயல் காற்று:
உன் ஊரெங்கும் நேற்று
புயல் காற்று வீசியதாமே..
ஓ..மாடிக் கொடிக்கம்பியில்
தாவணி காயப்போடிருந்தயோ...?