Friday, May 6, 2011


காதல் குறள்:

வழிமொழிதல் யார்க்கும் எளியவாம் -அரியவாம் 
காதலை முன்மொழியும் செயல் 

சேலைக் கொலை:

சுரிதார் அணிந்து வந்து 
கொன்றது போதாதென-இப்போது 
சேலை அணிந்து கொள்ள வருகிறாய்....
சொல்லிவிடு 
இப்படி என்னை வித விதமாய் கொல்வதற்கு-இன்னும் 
எத்தனை யுக்திகள் வைத்திருக்கிறாய் .....

பெரும் குழப்பம்:

அருகில் நீ...
எதிரில் நிலா....
இருவரில் யாரை ரசிப்பது ?
குழப்பத்தில் நான்....


அக்னி வெயில்:

நீ...
குடை பிடித்துச் செல்வதால் 
கோபத்தில் மற்றவர்களை 
கொளுத்துகிறது....சூரியன்...

ஒப்பனை:

ஒப்பனை செய்து செய்து என்ன பயன் ?
உன்னால்...
அழகு சாதனங்கள் 
அழகானது தான் மிச்சம்-அவற்றால் 
உன்னை உன்னைவிட 
அழகாக மாற்ற முடியவில்லை

புயல் காற்று:

உன் ஊரெங்கும் நேற்று 
புயல் காற்று வீசியதாமே..
ஓ..மாடிக் கொடிக்கம்பியில் 
தாவணி காயப்போடிருந்தயோ...?