Thursday, August 27, 2015

நவீன தொழில்நுட்பக் காதலன்...




caller tune வைத்து

காதலை சொன்னேன்,

block செய்து

whatsapp ல் கண்டித்தாய்,

unfriend செய்து

Facebook ல் தண்டித்தாய்,

புது எண்ணிலிருந்து

phone செய்த போதும்

குரல் அறிந்து

wrong number என துண்டித்தாய்...

அனைத்து application யும்

uninstall செய்துவிட்டு

ஆதிச் சேவையான

SMS ல் செய்தியனுப்பி

புறாவைத் தூதுவிட்டு

பதிலுக்கு காத்திருக்கும்

அரசனாய்.....

காதலோடு

காதலுக்காக

காத்திருக்கிறேன்

தயவு செய்து

Reply அனுப்பு.....




இப்படிக்கு

நவீன தொழில்நுட்பக் காதலன்.
Updated version 5.5

Thursday, July 23, 2015

மழை பயம்



மழை கோபித்துக் கொள்ளுமோ 
என பயந்துபோய் தான் 
நான்.....
குடை பயன்படுத்துவதில்லை !!!

Tuesday, July 21, 2015

ஹைக்கூவின் தங்கை...


முற்றத்தில் நிலா....
தனிமை தொலைந்தது!!!

Monday, July 6, 2015

காதல் கேளாய் கண்மணி


உனக்கான காத்திருப்பில்
வருவதாகச் சொல்லாத
மழை கூட வந்துவிட்டது
வந்து விடுவதாக உறுதி சொன்ன 
உனைக் காணவில்லை
நேரம் தவறாகக் காட்டுவதாய் 
கடிகாரத்தைக் குறை சொல்லியும்,
போக்குவரத்து நெரிசல்,மிகைப்பணி  
என்ற சுயகாரணங்களால்
எனைத் தேற்றிக்கொண்டும்  
நெடுநேரம் காத்திருக்க 
காத்திருப்பின் நீட்சீயில்............
காலநிலை மாறவே
வெண்ணிலா வந்து 
வானத்தில் விளக்கேற்றியது
காத்திருப்பின் சுகம் மட்டும் தந்துவிட்டு 
கடைசி வரை நீ வரவேயில்லை
என்றாலும் நாளை நிச்சயம் வந்துவிடுவாய் 
என நான் நினைத்துக்கொள்வேன் 
ஏனெனில்.........
உன்னில் ஒருபோதும் குறை காண்பதில்லை 
என் காதல்.........

-ம கோபி.

Saturday, May 16, 2015

அங்க பாரு மயிலு,
இங்க பாரு ஆடு,
எவ்ளோ பெரிய யானை பாரு,
ஐஐஐ!!! பூனை....
என மறந்து போன 
வாழ்வின் அழகியலை 
நினைவுபடுத்துகிறார்கள் 
குழந்தைகள்....

Thursday, March 19, 2015

காதலில் இற்றுப் போ....

அடுத்த ஜென்மத்தில்
ஆணாகப் பிறந்து....
இப்போதிருக்கும்
உனைப் போல அழகி
ஒருத்தியைப் பார்த்து...
இப்போதிருக்கும்
என்னை விட அதிகமாய்
காதலித்து துன்புறுவாய்.
இது என் சாபம்.....

காதல் அலைவரிசை ...

தொலைக்காட்சி அலைவரிசையாய் மனம்...
தொலைவிருந்து இயக்கும்
தொலைஇயக்கியாய் நீ....      (Remote control )
உன் கட்டுப்பாட்டில்
அலையோ அலையென
அலைந்து தவிக்கிறேன்
நான்.......

Saturday, February 14, 2015

காதலி என்னை காதலி....

7.30 am ; நீ இந்நேரம் விழித்திருப்பாய்.....
7.31 am ; உன்னழகை கண்ணாடியில்
ஆராய்ந்திருப்பாய்...
8.00-8.45 am ;ஒரு ஊரில்
அழகே உருவாய்
ஒருத்தி இருந்தாளே....
என பாடியபடி உனை
அலங்கரித்துக் கொண்டிருப்பாய்.
9.00 am ; ரெட் கலர் ஸ்கூட்டி பெப்பில் சிட்டென அலுவல் விரைந்திருப்பாய்....
நீ வாகனத்தில் பறக்க
வாகனமோ சொர்க்கத்தில்
மிதக்கும்....
9.30 ;உனை பார்த்த பிறகே பணி தொடங்க உன்னலுவல்
ஒரு தலைக் காதலர்கள் காத்திருப்பார்கள்...
நீயோ.... எனை
ஆரம்பத்தில் அழைத்தது போல் அண்ணனென அழைத்து ஆப் செய்திருப்பாய்...
இந்நேரம் இரண்டு கவிதைகள் உனக்கெழுதியிருப்பேன்...
5.30 pm; 5 மணிக்கு வருதாகச் சொன்னதால் அலறியடித்து வருவேன்...
6.30 pm;அன்ன நடையில் வருவாய்...
அந்நேரம் அவஸ்தையின்
ஆழம் கூடும்
காலை 5 மணிக்கு வந்த
கெட்ட கனவு முதல் 5 நிமிடத்திற்கு முன்பு நிகழ்ந்தது வரை
நொடிவிடாமல் சொல்வாய்,
வரி விடாமல் கேட்பேன்.
உன் பேச்சை நிறுத்த
திடுமென முத்தமிட்டால்...
கன்னம் துடைத்து
கதை தொடர்வாய்...
கடலை,சுண்டல்,ஐஸ்கிரீம் பரிமாறி விடைபெறுகையில் சொல்லாமல் தருவாய் பொல்லாத முத்தம்...
அதைக் காயாமல் எடுத்துச் சென்று நாட்குறிப்பில் ஒட்டிக்கொள்வேன்....
இதற்காகவேனும் ஒரேயொருமுறை காதலித்துவிடேன்.....