எத்தனை முறைதான்
கற்பனை செய்து எழுதுவது ........?
அனுபவித்து ஒரு முறையேனும்
எழுதவேண்டும் ......
அனைவரும் சொல்லும்
கவிதையெனும் ஒன்றை...
அதற்காகவேனும்
காதலித்து தொலையேன் ......
ம .கோபி
போட்டியில் நீ வென்றால்.....
நான் முத்தம் தர வேண்டுமென்கிறாய்
நான் வென்றால் ....
நீ முத்தம் தருவேன் என்கிறாய் ...
முத்தம் நிச்சயமேனும்போது
போட்டியில்
வென்றாலென்ன? தோற்றாலேன்ன ?
சரி சரி வா
பேசுவதை விட்டு விட்டு
விளையாட்டை தொடங்குவோம் .....