Saturday, April 6, 2013


எத்தனை  முறைதான் 
கற்பனை செய்து எழுதுவது ........?
அனுபவித்து ஒரு முறையேனும் 
எழுதவேண்டும் ......
அனைவரும் சொல்லும் 
கவிதையெனும் ஒன்றை...
அதற்காகவேனும் 
காதலித்து தொலையேன் ...... 

                                          ம .கோபி 

நிச்சயப்பரிசு


போட்டியில் நீ வென்றால்.....
நான் முத்தம் தர வேண்டுமென்கிறாய் 
நான் வென்றால் ....
நீ முத்தம் தருவேன் என்கிறாய் ...
முத்தம் நிச்சயமேனும்போது 
போட்டியில் 
வென்றாலென்ன? தோற்றாலேன்ன ?
சரி சரி வா 
பேசுவதை விட்டு விட்டு 
விளையாட்டை தொடங்குவோம் .....