Saturday, February 14, 2015

காதலி என்னை காதலி....

7.30 am ; நீ இந்நேரம் விழித்திருப்பாய்.....
7.31 am ; உன்னழகை கண்ணாடியில்
ஆராய்ந்திருப்பாய்...
8.00-8.45 am ;ஒரு ஊரில்
அழகே உருவாய்
ஒருத்தி இருந்தாளே....
என பாடியபடி உனை
அலங்கரித்துக் கொண்டிருப்பாய்.
9.00 am ; ரெட் கலர் ஸ்கூட்டி பெப்பில் சிட்டென அலுவல் விரைந்திருப்பாய்....
நீ வாகனத்தில் பறக்க
வாகனமோ சொர்க்கத்தில்
மிதக்கும்....
9.30 ;உனை பார்த்த பிறகே பணி தொடங்க உன்னலுவல்
ஒரு தலைக் காதலர்கள் காத்திருப்பார்கள்...
நீயோ.... எனை
ஆரம்பத்தில் அழைத்தது போல் அண்ணனென அழைத்து ஆப் செய்திருப்பாய்...
இந்நேரம் இரண்டு கவிதைகள் உனக்கெழுதியிருப்பேன்...
5.30 pm; 5 மணிக்கு வருதாகச் சொன்னதால் அலறியடித்து வருவேன்...
6.30 pm;அன்ன நடையில் வருவாய்...
அந்நேரம் அவஸ்தையின்
ஆழம் கூடும்
காலை 5 மணிக்கு வந்த
கெட்ட கனவு முதல் 5 நிமிடத்திற்கு முன்பு நிகழ்ந்தது வரை
நொடிவிடாமல் சொல்வாய்,
வரி விடாமல் கேட்பேன்.
உன் பேச்சை நிறுத்த
திடுமென முத்தமிட்டால்...
கன்னம் துடைத்து
கதை தொடர்வாய்...
கடலை,சுண்டல்,ஐஸ்கிரீம் பரிமாறி விடைபெறுகையில் சொல்லாமல் தருவாய் பொல்லாத முத்தம்...
அதைக் காயாமல் எடுத்துச் சென்று நாட்குறிப்பில் ஒட்டிக்கொள்வேன்....
இதற்காகவேனும் ஒரேயொருமுறை காதலித்துவிடேன்.....