Wednesday, July 21, 2010

கிறுக்கல்களின் தொகுப்பு -1

ரகசியமாம்....!!!

அவள் கூந்தலில் இருந்து 
வாடி விழுந்த பூக்களைக் கேட்டேன்
அவள் கூந்தல் வாசம் பற்றி,
அதற்கு அவைகள் கூறுகின்றன......!
உயிர் போனாலும்
என் காதலியின் ரகசியத்தை
கூறமாட்டேன் என்று,
நான் அவள் காதலன் என்பதை அறியாமல்!!


காவிரிப்பிரச்சனை 

தமிழக அரசே 
காவிரிக்குடிநீர் விவசாயதிற்கல்ல
அவள் வீட்டுக்குளியலறைக்கு என்று சொல்லுங்கள்
விடிவதற்குள் பிரச்சனை தீர்ந்துவிடும்.

சுனாமி எச்சரிக்கை 

கடலோரம் அவள் குளிக்கச்செல்கிறாள் 
கரையோர மக்களுக்கு உடனே 
யாராவது சுனாமி எச்சரிக்கை விடுங்கள்!!!

முக்கியசெய்திகள்

உன்னைக் குனிந்து பார்ப்பதால் 
கழுத்து வலிக்கிறதாம்....
உயரத்தை குறைக்கசொல்லி
ஊராட்சி நிர்வாகத்திடம் 
உள்ளூர் மின்கம்பங்களெல்லாம் மனு கொடுத்துள்ளதாம் 
நேற்றைய செய்தித்தாளில் படித்தேன்....

நல்ல வேளை

நல்ல வேளை 
அவள் பிறந்து இருபது வருடங்கள்தான் ஆகிறது 
இதுவே எழுபது வருடங்களுக்கு முன்பவள் பிறந்திருந்தால் 
இரண்டாம் உலகப்போரின் தேவையே இருந்திருக்காது
அதுவும் இந்தியாவில் பிறந்திருந்தால் 
இன்று வரை விடுதலையே கிடைத்திருக்காது .