Wednesday, May 4, 2016

மெய்த்தேடல்




திடுமென விழித்ததில்
தடைப்பட்டது...
நடுநிசி உறக்கம்.

உன் நினைவுக் கடப்பாரை
நெஞ்சக்குழி தோண்ட...
ஆழத்தில் கிடந்த நீ...
நீர் வந்த நிலமாய்...
நெஞ்சமேற்பரப்பில்
நிறைந்தாய்...

இன்னும் நீ
அப்படியேதானிருக்கிறாய்...
பால்முகம்,
பரவசமூட்டும் அழகு,
பரபரப்பற்ற குணம்,

கிணற்றுத் தூர்வாரலில்
கிடைத்த தொலைந்த பொருட்களாய்...
நம் காதல் நினைவுகள்
கிடைக்கத் தொடங்கியது...

முதல் சந்திப்பு,
இரண்டாவதற்கான காத்திருப்பு,
மூன்றாவதற்கான முயற்சி,
முன்மொழிவிற்கான ஒத்திகை...

நான் சொல்ல வந்து
சொல்லாமல் விட்டது,
நீ கேட்டுவிட்டு
கேட்காமல் போனது.

முயற்சி திருவினையானது...
கிடைத்தது காதல்!!!

காதல்,ஏக்கம்,
மோகம்,முத்தம்,
தனிமை,தவிப்பு,
காத்திருப்பு,
காதல் பரிசுகள்,
ஊடல்,கூடல்,
என எல்லாம் கடந்தோம்.

எங்கிருந்தோ வந்த
சந்தேகப் புயல்
மையம் கொள்ள...
காலம் நம்மைப்
புரட்டிப் போட்டது.

வருடங்கள் உருண்டோட
நீ வந்துவிடுவாயென்ற
நம்பிக்கையில்...
காத்திருந்தேன்...
காத்திருக்கிறேன்...
காத்திருப்பேன்...

வெள்ளை முலாம் பூசி
விடியத் தொடங்கியது
கருப்படர்ந்த கனத்த இரவு...

கோடிட்ட இடமாய்
நிரப்பப்படாமல்...
படுக்கையில் கிடந்தேன்
நான்....