Thursday, February 17, 2011

காதல் சொல்ல வந்தேன்







விடியும் வரை இரவுக்குத் துணையாக
முன்னிரவு முழுதும் விளித்துக்கிடந்து
மூளையில் படிந்த வார்த்தைகளை
கடிதமாய்
காகிதத்தில் முடிந்து
முப்பது ஒத்திகைகள் முடித்து
அலுவலகம் அதற்கு விடுப்பளித்து
காலை முதலே
கடிகாரத்தில் கவனம் குவித்து
முட்களை நகர்த்திப் பார்த்தும்
மாலை விடிவதற்கு யுகங்கள் பல ஆனது
ஏகாந்த விரதம் இன்றுடன் முடிப்பதற்காக
அவள் வரும் பாதையில்
அரை மணி நேர தவம் புரிய
ஆறு கோடி அழகுடன்
அவள் அருகில் வர
அடைத்து வைத்திருந்த வார்த்தைகள் யாவும்
திசைக்கொன்றாய் தெறித்து ஓட
மூக்கின் மேல் விளைந்த வியர்வையில்
மூன்றாவது முறை குளிக்க நேரவே
இதயமும் துடிப்பதை நிறுத்தி ஏறக்குறைய
இருபது நிமிடங்களானது
இப்படியாக
இந்த முட்டாள் கொண்டு வந்த காதலை
மொழிய முடியாமல் போகவே
பரபரப்பு ஏதுமின்றி
பாதகத்தி அவள் பார்வையிலேயே மொழிந்து போனாள்  
களிப்பில் செய்வதறியாமல்
எட்டி குதித்து வனம் பிடித்து
கையளவு சுருக்கி
கண்காணா தொலைவில் வீசியதில்
இருந்த இடம் தெரியாமல்
தொலைந்து போயின- சில
நிலாக்களும்,நட்சத்திரங்களும்.........