Tuesday, May 31, 2011
Friday, May 27, 2011
எனது இரவுகளும்,விடியல்களும்
கண்ணடிக்கும் தாரகைகள்
கண்டுகொள்ளாத வெண்ணிலா
ஊர சுற்றும் முகில் கூட்டம்
உயிர் தடவும் பனிகாற்று
வாலி,வைரமுத்து
இளையராஜா.ARR சகிதம்
மெல்லிசை பாடல்களின் அணிவகுப்பு
கற்பனை தீர்ந்துபோகவே
பாதி மட்டுமே எழுதிய கவிதைக்காகிதம்
பக்கத்தில் உறங்க
இயக்கமெல்லாம் முடங்கிவிட
இதயம் மட்டும் நிதம் துடிக்க
கடக்கத்தொடங்கியதொரு
சலனமற்ற இரவுப்பயணம்,
நடுநிசி
யாரோ வரும் சப்தம்
தலை கோதும் சுகம்,
நிடலத்தின் மீதொரு முத்தம்,
ஆர்பரித்து எழுந்துபார்த்தால்
அருகில் அவள்,
இப்போது ஏன் வந்தாய்,என் கேள்வி?
பார்க்கணும் போல இருந்தது வந்தேன் ,,,,
ஏன் வரக்கூடாதா? அவள் பதில் கேள்வி
கைகளை கிள்ளிப்பார்த்தேன்,
அட கனவா...
டேய்,தண்ணிய குடிச்சுட்டு படு
மனசு...
பின்தலையில் அடித்துக்கொண்டு-மீண்டும்
போர்வைக்குள் புதைந்தது உடல்,
காலைவேளை
சிற்றுண்டிக்கான காகத்தின் கரைசல்
குழம்பி கோப்பையுடன் அம்மா வந்தாள்,
பருகும் வேளையில்-மீண்டும்
அவள் நினைவுத்தீக்குச்சி,
ஒருவேளை அவள்
உண்மையாகவே வந்திருந்தாள்????
இனிப்புடன் தொடர்ந்த விகசிப்பு,
டேய் பகல்கனவு காணாம
அலுவலகம் கிளம்பு-மீண்டும்
அதிகார மனசு,
இப்படித்தான் என் ஒவ்வொரு
இரவுகளும்,விடியல்களும்.........
Friday, May 20, 2011
மழை....மழை மட்டுமல்ல.....
அலுவலக கோப்புகளுக்குள்
புதைந்திருந்த வேளை...
யாரோ,சொல்லத் தெரிய வந்தது
வெளியே நல்ல மழையாம்....
கோப்புகளை மூடி வைத்து
காகிதத்தை விரிக்கையில்
கொட்டியது
நினைவு மழை ...
சாளரக் கம்பியில் கைவைத்து பருகியதும்...
முழங்கால் நீரில் முழ்கி நீச்சல் பயின்றதும்...
மின்னல் புகைப்படங்களும்...
பொருள் விளங்காத
அர்ஜுனா அலறல்களும்....
காகித கப்பல் மூழ்கியதால் வந்த
வெட்கங்களும் ,
வேடிக்கை அவமானங்களும்....
எதிர் வீடு நண்பனின்
கப்பல் மூழ்கியதால்
ஏற்பட்ட களிப்பும்,
செய்த கிண்டல்களும்.....
அம்மாவின்
சேலை துவட்டல்களும்
செல்லத் திட்டுக்களும்
பருவ வயது மழையில் ஆடிய
மட்டைப்பந்தாட்டமும்....
நண்பனோடு நனைந்தே
கடந்த சாலைகளும்...
எதிர்ப்படும் கடைகளில் பருகும்
எண்ணிலடங்கா தேநீர்களும்...
வேளை கிடைத்து
வெளியூர் வந்த வேளைகளில்
பெய்த மழையின்
ஏகாந்த நனைதல்களும்
கரைத்து விட்ட கண்ணீர்களும்...
இவ்வாறாக
இணைந்து இருந்தவர்கள்
இயந்திர வாழ்க்கைச் சக்கரத்தில்
மிதி பட்டுப் போனதால்-எங்களை
இன்று
யார் யாரோ
அறிமுகம் செய்கிறார்கள்....
Friday, May 6, 2011
காதல் குறள்:
வழிமொழிதல் யார்க்கும் எளியவாம் -அரியவாம்
காதலை முன்மொழியும் செயல்
சேலைக் கொலை:
சுரிதார் அணிந்து வந்து
கொன்றது போதாதென-இப்போது
சேலை அணிந்து கொள்ள வருகிறாய்....
சொல்லிவிடு
இப்படி என்னை வித விதமாய் கொல்வதற்கு-இன்னும்
எத்தனை யுக்திகள் வைத்திருக்கிறாய் .....
பெரும் குழப்பம்:
அருகில் நீ...
எதிரில் நிலா....
இருவரில் யாரை ரசிப்பது ?
குழப்பத்தில் நான்....
அக்னி வெயில்:
நீ...
குடை பிடித்துச் செல்வதால்
கோபத்தில் மற்றவர்களை
கொளுத்துகிறது....சூரியன்...
ஒப்பனை:
ஒப்பனை செய்து செய்து என்ன பயன் ?
உன்னால்...
அழகு சாதனங்கள்
அழகானது தான் மிச்சம்-அவற்றால்
உன்னை உன்னைவிட
அழகாக மாற்ற முடியவில்லை
புயல் காற்று:
உன் ஊரெங்கும் நேற்று
புயல் காற்று வீசியதாமே..
ஓ..மாடிக் கொடிக்கம்பியில்
தாவணி காயப்போடிருந்தயோ...?
Subscribe to:
Posts (Atom)