காதல் குறள்:
வழிமொழிதல் யார்க்கும் எளியவாம் -அரியவாம்
காதலை முன்மொழியும் செயல்
சேலைக் கொலை:
சுரிதார் அணிந்து வந்து
கொன்றது போதாதென-இப்போது
சேலை அணிந்து கொள்ள வருகிறாய்....
சொல்லிவிடு
இப்படி என்னை வித விதமாய் கொல்வதற்கு-இன்னும்
எத்தனை யுக்திகள் வைத்திருக்கிறாய் .....
பெரும் குழப்பம்:
அருகில் நீ...
எதிரில் நிலா....
இருவரில் யாரை ரசிப்பது ?
குழப்பத்தில் நான்....
அக்னி வெயில்:
நீ...
குடை பிடித்துச் செல்வதால்
கோபத்தில் மற்றவர்களை
கொளுத்துகிறது....சூரியன்...
ஒப்பனை:
ஒப்பனை செய்து செய்து என்ன பயன் ?
உன்னால்...
அழகு சாதனங்கள்
அழகானது தான் மிச்சம்-அவற்றால்
உன்னை உன்னைவிட
அழகாக மாற்ற முடியவில்லை
புயல் காற்று:
உன் ஊரெங்கும் நேற்று
புயல் காற்று வீசியதாமே..
ஓ..மாடிக் கொடிக்கம்பியில்
தாவணி காயப்போடிருந்தயோ...?
இன்றுதான் தங்கள் பதிவுக்குள் வந்தேன்
ReplyDeleteகவிதைகள் அனைத்தும் அருமை
குறிப்பாக காதல் குறள்
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ARUMAI
ReplyDeleteதங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி
ReplyDeleteunmaiyile nalla iruckunga...keep going
ReplyDelete