Thursday, April 28, 2016

காதல் தண்டனை...






நெடுநாள் ஆசை
நேரினில் உனைப் பார்க்க...

காதினில் கேட்கிறது
உன் கால்கொலுசோசை.

தண்டனை போதும் அன்பே,
தனித்துத் தவிக்கிறேன்.

திரும்ப என்னிடம்
திரும்பிவிடு...

கொடுத்ததை கேட்கிற
பழக்கம் இல்லை
என்னிடம்...

இருக்கட்டும் இதயம்
பத்திரமாய் உன்னிடம்...

சோகத்தை கவிதையாய்
சொல்லிவிடலாம்,
வலியை வெல்வதெப்படி?

நினைப்பதை
சொல்லமுடியாமல்
தவிக்கிற வலி...
கொல்லப்படுவதை விட
கொடியது.

வந்தாய்...
உரிமை கொண்டாய்.

சென்றாய்...
உயிரைக் கொன்றாய்.

என் குழப்பமெல்லாம்...
ஏன் வந்தாய்?
ஏன் சென்றாய்?

காதல் அக்கறை...

நீ காட்டும் காதல்
அக்கறைக்காகவே
நான் தினம் பெறவேண்டும்
ஆயிரம் காய்ச்சல்,தலைவலிகள் ...