Thursday, March 17, 2016

கற்பனைக்காதலி...



நடுநிசியில் நீ வாழ்த்திய பிறகுதான்
நினைவுக்கு வந்தது...
இன்று நான் பிறந்தநாள் என

நீ பிறந்தநாளை
நினைக்கத் தொடங்கியதிலிருந்து,
மறக்கத் தொடங்கிவிட்டது
நான் பிறந்தநாள்.

எல்லோரின் வாழ்த்துக்களால்
என் பிறந்தநாள் அர்த்தப்பட்டது,
உன் வாழ்த்தால் தான்
என் பிறப்பே அர்த்தப்படுகிறது.

பிறந்தநாள் பரிசாக
எல்லோரும்...
எதைஎதையோ பரிசளிக்க,
நீ மட்டும்...
உன்னையும்,
உன் காதலையும்,
பரிசாக அளித்தாய்.

உன் வாழ்த்திலிருந்து
தொடங்கிவிட்டது...
என் வாழ்க்கை
.... 

2 comments:

  1. மிக மிக அற்புதம்
    மிகக் குறிப்பாய்
    முடிவில் சொல்லும் துவக்கம்,,,
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிக நன்றி ஐயா...உங்கள் பின்னூட்டத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.

    ReplyDelete