அழகை மட்டும் முன்னிறுத்தி
அறிவில் பின்தங்கி நிற்பவளே,
காதல்...
அழகில் தொடங்கி
அழகில் முடிவதில்லை.
அழகில் தொடங்கி
அழகில் முடிவதில்லை.
அன்பில் தொடர்ந்து,
பரஸ்பரம் புரிந்து,
சகலமும் பகிர்ந்து,
அர்ப்பணித்து,
அகமகிழ்ந்து,
காக்கவைத்து,
காத்திருந்து,
பரிதவித்து,
கசிந்துருகி,
கொஞ்சல் செய்து,
கெஞ்சவிட்டு,
கள்ளச் சந்திப்பில்
செல்லத் தொல்லையில்
மோகம் விட்டு
தேகம் தொட்டு,
எதற்கும் விட்டுக்கொடுக்காமல்,
எதையும் விடத் துணிந்து,
எதற்கும் விட்டுக்கொடுக்காமல்,
எதையும் விடத் துணிந்து,
தோள் சுருங்கி
முடி நரைத்து
வாழ்வின்
கடைசி இருப்பு வரை
உறையவிடாமல்,
உலரவிடாமல்,(உலர்த்துதல்)
காத்து நிற்றலே காதல்
காதலின் சுவையறியாதவளே
சுகம் தெரியாதவளே
உன் காதலின் களிப்பை விட
வாழ்நாள் தனிமை
ஓர் வரமே....
அறிவு எனச் சொன்னதை விட
ReplyDeleteஅது குறித்த அறிதலில் என இருந்தால்
இன்னும் சிறப்பாய் இருக்குமோ ?
மனம் கவர்ந்த கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஐயா,சரி செய்து கொள்கிறேன்
Delete